யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த வழக்கை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைத்த நீதிமன்றம்!

#SriLanka #Court Order #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago
யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த வழக்கை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைத்த நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த வழக்கை அக்டோபர் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. 

 பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 

 பின்னர் வழக்கு அக்டோபர் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.  

கிட்டத்தட்ட 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதன் மூலம் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் மீது சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!