கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’!
#India
#SriLanka
#Ship
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கப்பல் அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று (20) நாட்டிற்கு வந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப கப்பலுக்கு சம்பிரதாய வரவேற்பு அளித்தது. நாட்டிற்கு வந்த போர்க்கப்பல் வகை கப்பலான ‘INS SATPURA’ 142.5 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 403 பணியாளர்களைக் கொண்டுள்ளது.
குறித்த கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், ‘INS SATPURA’ கப்பலும் அதன் பணியாளர்களும் தீவின் முக்கியமான இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



