தற்போதைய மருந்து பற்றாக்குறை பிரச்சினைக்கு நிதிப் பிரச்சினைதான் காரணமா?

தற்போதைய மருந்துப் பற்றாக்குறைக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல என்று சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார்.
அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர், கொள்முதலில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயல்முறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குப் பிறகு தொடர்புடைய மருந்துகள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், சில மருந்துகள் தனியார் சந்தையில் கிடைக்காது, திறந்தவெளியில் கிடைக்காது, சந்தையில் கிடைக்காது, மருந்தகங்களில் கிடைக்காது. இதுபோன்ற ஒரு சிக்கல் உள்ளது.
மருந்துப் பதிவின் போது வரம்பற்ற விலைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் பதிவை நாங்கள் அனுமதிப்பதில்லை. தெற்காசிய நாடுகளில் தற்போதைய சந்தை நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை விரும்பாதவர்கள் மருந்துகளை வழங்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



