மீண்டும் விசாரணைக்கு வரும் ரணில் விவகாரம் : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா?

அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று (26) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
சம்பவம் தொடர்பாக கடந்த 22 ஆம் திகதிகைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிந்துரைகளின் பேரில், மறுநாள் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இருப்பினும், ஜனாதிபதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் 5 சிறப்பு மருத்துவர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார், மேலும் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து குழு பரிந்துரைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



