ரணிலை பார்வையிட சிறைச்சாலைக்கு வருகை தந்தார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
இன்று (23) காலை 9:30 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் சிறைச்சாலை மருத்துவமனையில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (22) இரவு பல அரசியல்வாதிகள் மெகசின் புதிய விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தனர். முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க மற்றும் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்ட ஆதரவாளர்கள் குழுவுடன் சிறைச்சாலைக்கு வந்தனர்.
இருப்பினும், அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை, பின்னர் வெளியே காத்திருந்தபோது கேமராவில் பதிவானது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனையின் பேரில் நேற்று (22) இரவு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



