கடையடைப்பு போராட்டம் உண்மையான மக்கள் எழுச்சியா? அல்லது அரசியல் பிரச்சாரமா? (வீடியோ இணைப்பு)

#SriLanka #M. A. Sumanthiran #Lanka4 #Harthal #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
1 day ago
கடையடைப்பு போராட்டம் உண்மையான மக்கள் எழுச்சியா? அல்லது அரசியல் பிரச்சாரமா? (வீடியோ இணைப்பு)

சுமந்திரன் அறிவித்த கடையடைப்பு போராட்டம் ஒரு உண்மையான மக்கள் எழுச்சியா, அல்லது அரசியல் பிரச்சாரமா என்பது கேள்விக்குறி.? திரு சுமந்திரனது அரசியல் மேடை நாடகம் பொய்யான தோற்றங்களே. தமிழர் அரசியல் களம் கடந்த பல ஆண்டுகளாக மாறி மாறி வரும் சிங்கள அரசுகளின் அழுத்தத்திலும் உட்பகை அரசியலிலும் சிக்கிக் கிடக்கிறது.

 இந்த மேடையில் ஒரு “மிதமான குரல்” போல தோன்றி, தனது சட்டவாதத் திறமையாலும், பேச்சுத் திறனாலும், சர்வதேச மற்றும் உள்நாட்டு அரங்குகளில் தமிழரின் சார்பாக பேசுவதாக தன்னை தானே சித்தரிக்கும் எம்.ஏ. சுமந்திரன். அவர் 2009-க்கு முன் கொழும்பிலேயே இருந்தபோது, தமிழர் இன அழிப்பு நடந்துகொண்டிருந்தபோது ஏன் இப்படியான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை? இப்போது பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத நிலையில், தன் அரசியல் இமேஜை மீட்டெடுக்கவும், தனது கட்டுப்பாட்டில் கட்சியை வைத்திருப்பதற்காக மக்களின் உணர்ச்சியை மீண்டும் பயன்படுத்தும் முயற்சி மட்டுமே இது ஒரு அரசியல் நாடகம் தனது முக்கியத்துவத்தை மீண்டும் பெற மக்கள் உணர்வுகளை கையாளும் முயற்சியாக தெரிகிறது.

 🔴. தமிழர்கள் ஏன் சுமந்திரனை நம்பி பயணிக்கக் கூடாது?

 🔴 . வரலாற்று ஆதாரங்கள் – சுமந்திரனின் கடந்தகால நிலைப்பாடுகள் எப்போதும் சிங்கள அரசின் நலன்களுக்கே ஆதரவாக இருந்துள்ளன.

 🔴. செயல்-சொல் முரண்பாடு – இராணுவ மயமாக்கலை எதிர்க்கிறார் என்றாலும், இராணுவ பாதுகாப்புடன் செயல்படும் பழக்கத்தை விட்டு விலகவில்லை. தமிழர் மண்ணில் இராணுவத்தின் கட்டுப்பாட்டை அவர் ஒருபோதும் தீவிரமாக எதிர்க்கவில்லை.

 🔴. தேசிய இலக்கு சிதைவு – அவரது அரசியல் முறை விடுதலை, சுயாட்சி மற்றும் நீதி என்ற தமிழர்களின் மூன்று அடிப்படைக் கோரிக்கைகளையும் பலவீனப்படுத்துகிறது.

 🔴. சமூக பிளவு – அவரது அரசியல் அணுகுமுறை தமிழர் ஒற்றுமையை பலவீனப்படுத்துகிறது. அவரது அரசியல் தமிழர் ஒற்றுமையைக் குலைத்து, முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்புகிறது.

 🔴. தமிழர் அரசியலில் விழிப்புணர்வின் அவசியம் தமிழர் சமூகத்துக்கு இன்றைய நிலையில் மிக அவசியமானது விழிப்புணர்வான அரசியல் தீர்மானம். சுமந்திரன் போன்றவர்கள் இனி ஒருபோதும் “தமிழர் விடுதலை குரல்” எனக் கருதப்படக் கூடாது. சுமந்திரன் போன்றவர்கள் தமிழர் விடுதலைக்கான நியாயமான பிரதிநிதிகள் அல்ல என்பதை உணர வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, அவர்களை தவறான பாதையில் அழைத்து செல்வது இன அழிப்பின் ஒரு புதிய வடிவம். அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதும் ஆதரிப்பதும் அவர்களின் செயல் பட்டியல் மற்றும் தமிழர் உரிமைகளுக்கான உண்மையான அர்ப்பணிப்பை, அவர்களின் கடந்த கால செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

 🔴. எம் இனத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய அரசியல் தீர்மானம் சுமந்திரன் மற்றும் அவரைப் போன்ற அரசியல் முகங்கள், தமிழர் தேசிய போராட்டத்தின் அடித்தளத்தை அமைதியாக சிதைத்து அழித்து வருகின்றனர். இவர்கள் “மிதமான பேச்சாளர்கள்” போலத் தோன்றினாலும், உண்மையில் தமிழர் எதிர்காலத்தை சிங்கள பாசிச ஆட்சியின் கைகளில் ஒப்படைக்கும் வியூகத்தை பின்பற்றுகின்றனர்.

 தமிழர்கள் இனி, வரலாறு கற்றுக் கொடுத்த பாடங்களை மறக்காமல், உண்மையான விடுதலை, நீதி, தன்னாட்சி ஆகிய இலக்குகளை முன்னெடுக்கும் தலைவர்களையே ஆதரிக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், எதிர்கால தமிழர் அரசியல் மீண்டும் சுமந்திரன் போன்றோரின் கைகளில் சிக்கி, தேசிய அபிலாசை என்றென்றும் மாய்ந்து போகும் அபாயம் உள்ளது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!