காலி துறைமுகத்தில் தீவிபத்து - 04 படகுகள் சேதம்!
#SriLanka
#fire
#Account
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

காலி மீன்பிடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத பல மீன்பிடி படகுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காலி நகராட்சி மன்ற தீயணைப்புத் துறை, கடற்படை, காலி மாவட்ட பேரிடர் பிரிவின் அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதுவரை தீ விபத்தில் 4 மீன்பிடி படகுகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



