கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்காக இடம்பெற்ற பயிற்சிப் பட்டறை
#SriLanka
#Embassy
#Netherland
#Journalist
Prasu
10 months ago
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் இணைந்து ஒழுங்கு செய்த கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பிலான பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பு ரிவேரா தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இப் பயிற்சிப்பட்டறையில் நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பிலும் அதனுடைய வரைபுகள், நடைமுறைகள், தண்டனைகள் போன்றவைகள் தொடர்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்ட ஆலோசகர் அஷ்வினி நடேசன் மற்றும் போலி செய்திகளை இனங்கானல் தொடர்பில் வளவாளர் யசிகரன் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினார்கள்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெல்லா டலிமா தலைமையில் நடைபெற்ற இவ் செயலமர்வில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
