தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் அரசாங்கம் - சிறிதரன் காட்டம்!
#SriLanka
#government
#Minister
Soruban
4 months ago
இலங்கையில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட படையினர்மீது இதுவரை எவ்வித நீதிமுறையிலான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மாறாக, தமிழர் தரப்பைதான் திட்டமிட்டு குற்றவாளிகளாகக் காண்பிக்கப்படும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.