நெடுந்தீவில் விபத்துக்குள்ளான சுற்றுலா பயணிகள் படகு - 14 பேர் பாதுகாப்பாக மீட்பு

#Jaffna #Accident #Boat #Rescue
Prasu
6 hours ago
நெடுந்தீவில் விபத்துக்குள்ளான சுற்றுலா பயணிகள் படகு - 14 பேர் பாதுகாப்பாக மீட்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு , நடுக்கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த 14 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

நெடுந்தீவை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சிறிய படகில் , நெடுந்தீவில் இருந்து 12 சுற்றுலா பயணிகளும் , படகின் பணியாளர்கள் இருவருமாக 14 பேர் குறிகாட்டுவான் நோக்கி தமது பயணத்தினை ஆரம்பித்துள்ளனர். 

நெடுந்தீவுக்கும் , குறிகாட்டுவானுக்கும் இடையில் கடலில் படகு திடீரென பழுந்தடைந்துள்ளது அத்துடன் படகினுள் கடல் நீரும் உட்புக தொடங்கியுள்ளது.

அந்நிலையில் படகில் இருந்த பணியாளர்கள் , இருவரும் படகில் இருந்து வெள்ளைக்கொடியை அசைத்து காட்டியுள்ளனர்.

அதனை பிறிதொரு படகில் சென்றவர்கள் அவதானித்து , குறித்த படகினை நோக்கி விரைந்துள்ளனர். படகு நீரில் மூழ்கிய வண்ணம் காணப்பட்டதனை அடுத்து, படகில் இருந்தவர்கள் தமது படகுக்கு ஏற்றியுள்ளனர். 

அவ்வாறு ஏற்றிய போதிலும் , 12 பேர் படகில் ஏறிய நிலையில் , இருவர் படகில் ஏற முதல் பழுதடைந்த படகு கடலில் மூழ்கியுள்ளது. அந்நிலையில் இருவரும் கடலில் நீந்திய பாதுகாக்க வந்த படகில் ஏறியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் அறிந்த கடற்படையினர் சம்பவ இடத்திற்கு தமது படகில் விரைந்து , மூழ்கிய படகில் இருந்து காப்பற்றப்பட்டவர்களை தமது படகில் ஏற்றி குறிகாட்டுவான் கரைக்கு கொண்டு வந்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752340524.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!