200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி!
#SriLanka
#Coconut
Dhushanthini K
5 months ago

அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தேங்காய் கைத்தொழில் சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் உர விலை அதிகரிப்பு என்று அதன் தலைவர் ஜெயந்த சமரக்கோன் தெரிவித்தார்.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



