பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் முதுகெலும்பிலிருந்து 2.5 அங்குல கத்தி துண்டு அகற்றம்

#Murder #Actor #Surgery #Knife #Bollywood
Prasu
3 weeks ago
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் முதுகெலும்பிலிருந்து 2.5 அங்குல கத்தி துண்டு அகற்றம்

மும்பையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் ஒரு மர்ம நபரால் கத்தியால் தாக்கப்பட்ட பின்னர்,சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நடிகர் சைஃப் அலி கான் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே வந்து நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில், கானின் கழுத்து உட்பட ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டது. ஐந்து மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது முதுகெலும்பிலிருந்து 2.5 அங்குல கத்தி துண்டு அகற்றப்பட்டது.

“சைஃப் அலி கான் சிறப்பாக செயல்படுகிறார். நாங்கள் அவரை நடக்க வைத்தோம், அவர் நன்றாக உள்ளார். எந்த பிரச்சனையும் இல்லை, அதிக வலியும் இல்லை” என்று நகரின் லிலாவதி மருத்துவமனையின் டாக்டர் நிதின் நாராயண் டாங்கே தெரிவித்தார்.

“நாங்கள் அவரை ஐ.சி.யுவில் இருந்து ஒரு சிறப்பு அறைக்கு மாற்றியுள்ளோம். அவரது முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஒரு வாரமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இது தொற்று பரவுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!