தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவர் நியமனம்!
#SriLanka
Mayoorikka
11 months ago
மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு) தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தவிடமிருந்து (ஓய்வு) நேற்று புதன்கிழமை (01) பெற்றுக்கொண்டார்.
அதனையடுத்து, மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) நேற்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.