நாய் ஒன்றினால் இழுத்துச் செல்லப்பட்ட சிறு குழந்தையின் கால்! விசாரணைகளை தீவிரப்படுத்திய பொலிஸார்
#SriLanka
Mayoorikka
1 year ago
சிலாபம் கடற்கரையில் திங்கட்கிழமை (2)அன்று நாய் ஒன்றினால் இழுத்துச் செல்லப்பட்ட சிறு குழந்தையின் கால் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடற்கரையில் நாய் ஒன்று ஆறு மாதம் மதிக்கத்தக்க குழந்தையின் காலை இழுத்துச் செல்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.