மூன்று வருடங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்போம்! என் பி பி அரசாங்கம்
#SriLanka
Mayoorikka
1 year ago
எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கும் மேலாக குறைக்கவுள்ளோம் என வர்த்தகம், வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்து பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
"புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டத்தை நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.
ஜனாதிபதியின் வாக்குறுதியின்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் 30 வீதத்திற்கும் அதிகமான மின் கட்டணத்தை குறைக்கும்” என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கணிசமாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.