உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள மசோதா!
#SriLanka
#Election
#Parliament
Dhushanthini K
8 months ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால தரக் கணக்கு மூலம் ஒதுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வது தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு ஜனவரி முதல் பாதியில் புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பழைய வேட்புமனுக்களை ரத்து செய்வது தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடு அடுத்த வாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
பின்னர் அது தொடர்பான முன்மொழிவு மசோதாக்கள் துறையிடம் சமர்ப்பிக்கப்படும்.
அதன்படி, ஜனவரி மாத தொடக்கத்தில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.