வெள்ள அனர்த்தம் காரணமாக நோய்கள் பரவும் அபாயம்!
#SriLanka
Mayoorikka
1 year ago
தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக எதிர்காலத்தில் டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவது வேகமாக அதிகரிக்கலாம் என, சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் நாட்களில் வெள்ளம் தணிந்ததன் பின்னர் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமானது என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் டொக்டர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார்.