அரசாங்கத்தின் பொருளாதர நிலையை ஆராய்ந்த பின்னரே புதிய திட்டங்கள்: ஜப்பான்
#SriLanka
#Japan
Thamilini
1 year ago
இலங்கை அதிகாரிகளின் எந்தவொரு கோரிக்கையையும் அதன் பொருளாதார நிலையையும் ஆராய்ந்த பின்னரே புதிய திட்டங்கள் தொடர்பில் பரிசீலிக்க முடியும் என ஜப்பான் அறிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட 11 திட்டங்களை மேற்கொள்வதே அதன் முன்னுரிமை என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 11 திட்டங்களும் சுமூகமாகவே இடம்பெற்று வருவதாகவும் ஜப்பானிய தூதரகம் மேலும் அறிவித்துள்ளது.