உயர்தர பரீட்சையை மீள நடத்துவது தொடர்பில் வௌியான அறிவிப்பு!
#SriLanka
#exam
#Test
Dhushanthini K
8 months ago

கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை மீள நடாத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) திரு.சம்பத் துய்யகொண்டா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 9ஆம் திகதிக்கு பின்னர் வானிலை நிலைமையை மீள்பகுப்பாய்வு செய்து அதன் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.



