சட்டவிரோத அழைப்பு மையத்தில் பணியாற்றிய வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 26 பேர் கைது!
#SriLanka
#Arrest
Dhushanthini K
8 months ago

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இன்று காலை 26 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் சட்டவிரோத அழைப்பு மையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த 10 நாடுகளை சேர்ந்த பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு சீன நாட்டவர் இந்த வணிகத்தின் பின்னணியில் மூளையாக இருப்பதாக நம்பப்படுகிறது. அதேநேரம் கென்யாவை சேர்ந்தவர் மேற்பார்வையாளராக இருந்ததாக கூறப்படுகிறது.



