சீரற்ற வானிலை : மலையக பகுதியூடாக பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#weather
#Land_Slide
Dhushanthini K
8 months ago

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.
சீரற்ற காலநிலையுடன் மலையக பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இரண்டாம் கட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பகுதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி பதுளை மாவட்டம் - மீகஹகிவுல, பசறை, ஹலிலெல மற்றும் பதுளை, கண்டி மாவட்டம் - தெல்தோட்டை, கங்கவட கோரலய, உடுதும்பர, உடபலைத, மாத்தறை மாவட்டம் - வில்கமுவ, அம்பங்கங்க கோரலய, நுவரெலியா மாவட்டம் - ஹங்குரக்கேத்த, வலப்பனே ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



