மாவீரர்கள் தினத்துக்கு தடை இல்லை - தேசிய மக்கள் சக்தி அறிக்கை
#Jaffna
#Day
#memorial
Prasu
1 year ago
தமிழ் மக்கள் உயிர்நீத்தவர்களுக்கான வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எவ்வித தடையும் கிடையாது.
அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தமுடியும் என்று புதிய அரசின் கடற் றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிர்நீத்தவர்கள் தினத்தை தமிழ் மக்கள் இம்முறை எந்தவிதமான கெடுபிடிகளும் இன்றி நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க முடியும்.பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்கவேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.