பராளுமன்றத்தில் முதல் நாளே அர்ஜுனாவின் ஆட்டம் ஆரம்பம்! இனி சபைக்குள் சரவெடிதான்(photos)
#SriLanka
#Parliament
Mayoorikka
8 months ago

பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்துவிட்டார் டாக்டர் அர்ஜுனா இராமநாதன்.
அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள் என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று அர்ஜுனா கேட்டுள்ளார்.
புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்... ஆனால் ஜனாதிபதி , பிரதமர் , எதிர்க்கட்சித்தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது..
சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற ,சம்பிரதாயத்தை மாற்றத்தானே வந்திருக்கிறேன் என்கிறார் அர்ஜுனா... அநேகமாக இனி சபைக்குள் சரவெடிதான் நடக்கப் போகின்றது என பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.



