பிணையில் விடுதலையானர் ஹரின் பெர்னாண்டோ!
#SriLanka
#Harin Fernando
Dhushanthini K
8 months ago

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹரின் பெர்னாண்டோவை தலா 05 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) காலை பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பாராளுமன்ற தேர்தல் தொடர்பான சட்டவிரோத பிரச்சாரம் உட்பட 06 குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது.



