போதைப் பொருட்களுடன் பல நாள் மீன்பிடி படகு ஒன்று மீட்பு!
#SriLanka
#Arrest
Dhushanthini K
9 months ago

இலங்கை கடற்படையினரால் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு மேற்கே சுமார் 110 கடல் மைல் (200 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் நேற்று (16) இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடற்படையினர் 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், பல நாள் மீன்பிடிக் கப்பலில் 40 கிலோ போதைப்பொருள் கையிருப்பு இருந்ததாக கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பல நாள் கப்பல் மற்றும் சந்தேக நபர்கள் தற்போது மேலதிக ஆய்வு மற்றும் எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.



