10ஆவது பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர்! நடக்கவிருக்கும் விசேட நிகழ்வு
#SriLanka
#Parliament
Mayoorikka
1 year ago
10ஆவது பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அன்றைய தினம், பாராளுமன்றத்தின் முக்கிய பொறுப்புகள் பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அமர்வின் போது, உறுப்பினர்களுக்கு இருக்கை ஏற்பாடு இல்லை. அதன்படி, எம்.பி.க்கள் எந்த இருக்கையில் வேண்டுமானாலும் அமரலாம். செங்கோளை வைத்த பிறகு சட்டசபையின் வேலை தொடங்கும்.
முதலில் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். முதலில் சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது பாராளுமன்ற மரபு.
அதன்பின், எம்.பி,க்கள் பதவியேற்பு விழா நடக்க உள்ளது.
துணை சபாநாயகர் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.