யாழ் வடமராட்சி பகுதியில் போடப்பட்டிருந்த வீதித் தடைகள் அகற்றம்!
#SriLanka
#Jaffna
Dhushanthini K
9 months ago

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி, நாகர்கோவில், வலிக்ககண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த இராணுவம், மற்றும் போலீஸ் இணைந்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோத மணல் அகழ்வு உட்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த போடப்பட்ட குறித்த வீதித்தடைகளால் மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



