விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
#SriLanka
#Court
Dhushanthini K
9 months ago

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களுக்கும் சாதாரண போக்குவரத்திற்கும் இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், திட்டமிடப்பட்ட விசாரணைக்கு ஆஜராக முடியாமல் போனதாக அவரது வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.
உண்மைகளை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் சாட்சிகளையும் அடுத்த விசாரணைத் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.



