மலேசியாவில் இருந்து இலங்கை வந்த நபர் கட்டுநாயக்காவில் கைது!
#SriLanka
#Arrest
Dhushanthini K
9 months ago

5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரிடம் இருந்து 5 கிலோ 26 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை ஏற்றிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆண் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் வந்த காரை போலீசார் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.



