இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் : சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்பு உத்தரவை பெற்ற பொலிஸார்!
#SriLanka
#Police
#sri lanka tamil news
Dhushanthini K
9 months ago

இந்நாட்டில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பொலிஸார் தடுப்பு உத்தரவுகளை பெற்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த நாட்டில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.



