உலக நாடுகளின் முக்கியஸ்தர்களை சந்திக்கும் ஜனாதிபதி!
#SriLanka
#AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்கள், ஈரான் மற்றும் மியன்மார் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினருடன் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்றை நடத்த உள்ளார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் முக்கிய துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வது குறித்து இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்புகள் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதையும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முன்னணிகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன, இது வலுவான சர்வதேச கூட்டாண்மைகளைப் பேணுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.