கொழும்பில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்த பேருந்து!
#SriLanka
Dhushanthini K
10 months ago

50 பயணிகளுடன் கொழும்பில் இருந்து பயணித்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அம்பிலிபிட்டிய-கொழும்பு வீதியில் கஹவத்தைக்கும் கொடகவெலவிற்கும் இடையில் மாதம்பே பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இன்று காலை 07.30 மணியளவில் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விபத்தில் எவருக்கும் காயமோ அல்லது பலத்த காயமோ ஏற்படவில்லை எனவும், தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



