2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் : இறுதி பிரச்சார கூட்டங்கள் இடம்பெறும் இடங்கள் அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக நடத்தப்படும் தேர்தலுக்கு முந்திய பிரசாரக் கூட்டங்கள் தொடர்பான இறுதிப் பிரச்சாரக் கூட்டங்கள் நாளை (18.09) நடைபெறவுள்ளன.
அதன்படி, நாளை கொழும்பு நகரம், கொட்டாவ மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரசார கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு போக்குவரத்து திட்டத்தை அமல்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.