புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த திட்டமிடும் சுவிட்சர்லாந்து!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பிரித்தானியா புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்த திட்டமிட்டு அதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
அதேபோல் சுவிட்சர்லாந்தும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஆப்பிரிக்க நாடொன்றுக்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கபட்ட, எரித்ரியா நாட்டவர்கள் சுமார் 300 பேர் வாழ்ந்துவருகிறார்கள்.
அவர்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருவதாக தகவல் கசிந்துள்ளது.



