173 பேர் சுவிஸ் நாட்டிற்குள் நுழைய தடை : பெடரல் அலுவலகத்தின் அறிக்கை வெளியீடு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
2023 ஆம் ஆண்டில், 173 வெளிநாட்டினர்களுக்கு சுவிட்சர்லாந்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக பெடரல் போலீஸ் அலுவலகத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக சந்தேகத்தமையினாலையே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாதம், உளவு பார்த்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களை மேற்கொள்ளுதல் ஆகியவை இவர்களின் நுழைவுத் தடைக்கான முக்கிய காரணங்களாகும்.