சிலோன் பிரிமியர் லீக் போட்டி : தம்புள்ளை அணியின் உரிமையில் மாற்றம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்த வருடம் சிலோன் பிரிமியர் லீக்கில் இணையும் தம்புள்ளை அணியின் உரிமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி கடந்த முறை தம்புள்ளை ஆரவாக போட்டியிட்ட தம்புள்ளை அணி இம்முறை தம்புள்ளை தண்டர் என்ற பெயரில் போட்டியிடவுள்ளது.
இம்முறை தம்புள்ளை அணியின் உரிமையை பங்களாதேஷ் வர்த்தகர்கள் இருவர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலோன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இதுவரை 250 இற்கும் அதிகமான வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.