ஹிக்கடுவை கடலில் நீராடிய லிதுவேனிய நபர் நீரில் மூழ்கி பலி

#SriLanka #Death #Hospital #beach #Foriegn
Prasu
1 month ago
ஹிக்கடுவை கடலில் நீராடிய லிதுவேனிய நபர் நீரில் மூழ்கி பலி

ஹிக்கடுவை நகரத்துக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 57 வயதுடைய லிதுவேனிய பிரஜையாவார். 

இவர் ஹிக்கடுவை நகரத்திற்கு அருகில் உள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் சம்பவ இடத்தில் இருந்த உயிர்காப்பாளர்கள் இவரை மீட்ட்டு பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.