ஞானசார தேரரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!
#SriLanka
#Court Order
Mayoorikka
2 years ago
ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (02) மறுத்துள்ளது.
இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் பிணை மனுவை நிராகரித்துள்ளார்.
ஞானசார தேரரை பிணையில் விடுவிப்பதற்கான விசேட சூழ்நிலைகள் எதுவும் நீதிமன்றில் முன்வைக்கப்படவில்லை என, அவர் குறிப்பிட்டுள்ளார்.