தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த தம்பதியினர் கைது!

#SriLanka #Arrest #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
5 months ago
தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த தம்பதியினர் கைது!

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த தம்பதியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

விவசாய திணைக்களத்தின் கால்நடை தனிமைப்படுத்தல் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த தம்பதியினர் நேற்று (25) பிற்பகல், பாங்கொக்கில் இருந்து விமானம் சிறிய பெட்டிகளில் விலங்குகளை கொண்டு வந்துள்ளனர்.

அவர்கள்  தட்டான்கள், தவளைகள், நீர்நாய்கள், அணில்கள், மீன்கள், ஆமைகள், பல்லிகள், வெள்ளெலிகள், சாலமண்டர்கள், எலிகள் மற்றும் மற்றொரு வகை புழுக்கள் என 88 விலங்குகள் உயிருடன் கொண்டுவரப்பட்டுள்ளது. 

குறித்த விலங்குகள் விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.