பொது ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
பொது ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பொது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு வரும் 10 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என அமைச்சர் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், பொது ஊழியர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டதாகவும், முன்னதாக 5000  செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆகவே வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.