ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை அமைச்சரவையின் அங்கீகாரத்தின் ஊடாக அமுல்படுத்த நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
5 months ago
ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை அமைச்சரவையின் அங்கீகாரத்தின் ஊடாக அமுல்படுத்த நடவடிக்கை!

ஒன்லைன் முறைமைகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தில் பல திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் ஊடாக சட்டமூலம் அமுல்படுத்தப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.   

ஸநிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  இந்த சட்டத்தின் பிரகாரம் சிவில் வழக்குகளை தாக்கல் செய்ய முடியும் எனவும், தடை செய்யப்பட்ட அறிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்படுவதை தடுப்பதே இந்தச் செயலின் நோக்கமாகும் எனக் கூறிய அவர்.  இந்தச் சட்டத்தின் நோக்கம் தவறு செய்யும் ஆன்லைன் கணக்குகளைக் கண்டறிவதும், தடை செய்யப்பட்ட அறிக்கைகளை மீண்டும் மீண்டும் தொடர்புகொள்வதைத் தடுப்பதும் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்தச் சட்டத்தின்படி சமூக ஊடகங்களில் ஏதாவது வெளியிடப்பட்டால், அதை வெளியிடுபவரே பொறுப்பேற்க வேண்டும் என்று டிஐஜி இறுதியாக வலியுறுத்தினார்.