மற்றுமோர் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹுதி கிளர்ச்சியாளர்கள்!

#SriLanka #world_news #Attack #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Ship #Houthi #RedSea
Thamilini
2 years ago
மற்றுமோர் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹுதி கிளர்ச்சியாளர்கள்!

ஏடன் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.  

இந்த தாக்குதலால் கப்பலின் சரக்கு கொள்கலன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதனை கட்டுப்படுத்த தீயணைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 இந்த தாக்குதலால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, மேலும் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

செங்கடலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் வணிக கப்பல்கள் மீது நடத்திய சமீபத்திய தாக்குதல் இது என்று வெளிநாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன. 

ஏடனில் இருந்து தென்கிழக்கே 60 கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடந்ததாக இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4