இஸ்ரேல் - ஹமாஸ் போர் : காசா பகுதியில் 25,000 அதிகமானோர் பலி!
#SriLanka
#Israel
#War
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இஸ்ரேலிய தாக்குதல்களின் போது காஸா பகுதியில் 25,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 178 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை நடந்த போரின் மோசமான நாட்களில் இதுவும் ஒன்று என்று இந்த தாக்குதலை வெளிநாட்டு ஊடகங்கள் விவரித்துள்ளன.
அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் போராளிகள் 1,300 பேரைக் கொன்றது மற்றும் 240 க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாகக் கைப்பற்றிய பின்னர் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியது.
எனினும், தொடரும் சண்டை காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பாலஸ்தீன நாட்டை உருவாக்க மறுத்துள்ளார்.



