செயற்கை நுண்ணறிவால் 60 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் - கிறிஸ்டலினா ஜார்ஜீவா!
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#lanka4Media
Thamilini
1 year ago
உலகில் 60 சதவீத வேலைகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற பேட்டியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வளரும் நாடுகளில் பாதிப்பு 40 சதவீதம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகமான மக்களுக்கு நன்மைகளை உருவாக்க உதவும் என்று கூறியுள்ளார்.