2024 அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட முடியுமா? : உச்சநீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதை அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அந்நாட்டு அரசியலமைப்பின் 14வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உரிய முடிவின்படி, அதிபர் தேர்தலில் கொலராடோ மாகாணத்தில் போட்டியிடும் வாய்ப்பை டொனால்ட் டிரம்ப் இழப்பார்.
எனினும் இந்த முடிவை எதிர்த்து டொனால்ட் டிரம்ப் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.