இலங்கை வங்குரோத்து அறிவிப்பை வெளியிடவில்லை : மத்திய வங்கியின் ஆளுநர்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#nandalal weerasinghe
Thamilini
2 years ago
இலங்கை வங்குரோத்து அறிவிப்பை வெளியிடவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அப்போது, கடனை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது மட்டுமே நடந்ததாக அவர் கூறுகிறார்.
நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாவிட்டால் நெருக்கடி மேலும் உக்கிரமடைந்திருக்கும் என சுட்டிக்காட்டிய அவர், அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் எந்தவொரு அரசாங்கமும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.