பைடன் மீதான விசாரணைகளை முன்னெடுக்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜோ பைடனுக்கு எதிரான ஊழல் பேரங்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், பதவி நீக்கம் தீர்மானத்தை கொண்டுவரதிட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான பதவி நீக்க விசாரணைக்கான தீர்மானத்தின் மீது நேற்று (13.12) பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு இடம்பெற்றதுடன், அது தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக 221 வாக்குகளும், எதிராக 212 வாக்குகளும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



