பாராளுமன்றத்திற்கு கறுப்பு சால்வையுடன் வந்து மீனவர்களின் அவலத்தை கூறிய உறுப்பினர்!
#SriLanka
#Parliament
#taxes
#Fisherman
Mayoorikka
2 years ago
மீனவர்களின் அவல நிலையை நாட்டுக்கு காட்ட வேண்டும் என்று கூறி கறுப்பு சால்வை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட சபை உறுப்பினர் துலிப் வெதஆராச்சி இன்று உரையாற்றினார்.
கடற்றொழில் அமைச்சு மீதான பாராளுமன்ற வரவு- செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய வெதஆராச்சி, தற்போது சுமார் மூவாயிரம் மீன்பிடி படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வற்வரி அதிகரிப்பினால் மீனவர்கள் எப்படி வாழ்வார்கள் என்று தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சுமார் மூவாயிரம் மீன்பிடி படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தான் அணிந்திருக்கும் கறுப்பு சால்வை மீனவர்களின் வேதனையை காட்டுவதாக குறிப்பிட்டார்.