கல்முனைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்!
#SriLanka
#Ampara
#Earthquake
#Kalmunai
Mayoorikka
2 years ago
அம்பாறை கல்முனைக்கு அருகில் இன்று அதிகாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
5.1 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இன்று அதிகாலை 3:41 மணியளவில் கல்முனையில் இருந்து 51 கிலோ மீற்றர் தொலைவில், கடலுக்கு அடியில் 366.2 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிக ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மேற்பரப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.