நன்றிக்கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி!
#France
#world_news
#Letters
#President
Mayoorikka
2 years ago

ஜனாதிபதியாக பதவியேற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நன்றிக்கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தமது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி, கையெழுத்திட்டு அதை புகைப்படமாக்கி தனது டுவிட்டர் சமூகவலைத்தள கணக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றியுள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், என்னை ஜனாதிபதியாக தேர்தெடுக்க காரணமான அனைவருக்கும் எனது நன்றி.
நான் அனைத்து பிரெஞ்சு மக்களுக்கும், எங்களது பிள்ளைகளுக்கும் மேம்பட்ட வாழ்க்கையினை ஏற்படுத்திக்கொடுக்க முயற்சி செய்கிறேன்’ என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



